Wednesday, September 03, 2014
விஜய்- சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு வந்தார். அந்த வரிசையில், இந்த படத்திலும் விஜய் பாடப்போவதாக தகவல் வந்தது. அதன்படி கத்தி படத்துக்காக அனிருத் இசையில் ‘செல்பிபுள்ள…’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.
சமீபகாலமாக விஜய் பாடும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. ‘துப்பாக்கி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் இவர் இணைந்து பாடிய, ‘கூகுள் கூகுள்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’, ஜில்லா படத்தில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ ஆகிய பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்தன. அந்த வரிசையில் கத்தி படத்தில் விஜய் பாடிய ‘செல்பி புள்ள’ பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நம்பலாம்.
இப்படத்தை தயாரித்திருக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது. எனவே இப்படத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள் மற்று பல்வேறு தமிழ் அமைப்புகள் போராடி வருகின்றன.எனவே கத்தி படம் திரைக்கு வருவது சந்தேகமே.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
.jpg)
0 comments:
Post a Comment