Saturday, September 13, 2014
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி வன ச்சரகம். இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமராவதி நகர், சாயப்பட்டறை, பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அந்த சிறுத்தை அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து சாப்பிட்டுள்ளது. மற்றொரு நாள் அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாயை அடித்து சாப்பிட்டுவிட்டது. குறிப்பாக அமராவதி நகர் அரசு மருத்துவமனை மற்றும் சைனிக் பள்ளி அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், அதன் கால் தடங்கள் ஆங்காங்கு பதிந்துள்ளதை பலர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகின்றனர்.
மேலும் சைனிக் பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சத்திற்குள்ளாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கவும் தலா 5 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து, அமராவதி வனச்சரக வனவர் செல்வராஜ் வெள்ளிக்கிழமை கூறியது:
இரவு நேரங்களில் 2 குழுக்களாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தையில் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகிறோம். ஓரிரு நாள்களில் கூண்டு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சைனிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இரவு நேரங்களில் அறையை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், மேலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அந்தச் சிறுத்தையைப் பிடித்து விடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
0 comments:
Post a Comment