Saturday, September 13, 2014
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி வன ச்சரகம். இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமராவதி நகர், சாயப்பட்டறை, பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அந்த சிறுத்தை அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து சாப்பிட்டுள்ளது. மற்றொரு நாள் அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாயை அடித்து சாப்பிட்டுவிட்டது. குறிப்பாக அமராவதி நகர் அரசு மருத்துவமனை மற்றும் சைனிக் பள்ளி அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், அதன் கால் தடங்கள் ஆங்காங்கு பதிந்துள்ளதை பலர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகின்றனர்.
மேலும் சைனிக் பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சத்திற்குள்ளாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கவும் தலா 5 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து, அமராவதி வனச்சரக வனவர் செல்வராஜ் வெள்ளிக்கிழமை கூறியது:
இரவு நேரங்களில் 2 குழுக்களாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தையில் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகிறோம். ஓரிரு நாள்களில் கூண்டு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சைனிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இரவு நேரங்களில் அறையை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், மேலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அந்தச் சிறுத்தையைப் பிடித்து விடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment