Friday, September 05, 2014
மதுரை டி.பி.ரோடு அரசரடி ரெயில்வே கிரவுண்டு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் 37 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது உடலில் பல்வேறு இடங்களில் குத்து காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த ராமுத்தேவரின் மகன் முருகன் (வயது37) என தெரியவந்தது.
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு 2 மகள் உள்ளனர். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியாக வசித்து வந்தனர்.
தனியாக வசித்து வந்த முருகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் முருகனை ஒரு ‘மர்ம’ கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு பிணத்தை பஸ் நிறுத்தத்தில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண்ணுடன் கள்ளத் தொடர்பு விவகாரமா? அல்லது தொழில் போட்டியா? முன்விரோதம் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3–க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment