Friday, September 05, 2014
மதுரை டி.பி.ரோடு அரசரடி ரெயில்வே கிரவுண்டு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் 37 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது உடலில் பல்வேறு இடங்களில் குத்து காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த ராமுத்தேவரின் மகன் முருகன் (வயது37) என தெரியவந்தது.
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு 2 மகள் உள்ளனர். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியாக வசித்து வந்தனர்.
தனியாக வசித்து வந்த முருகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் முருகனை ஒரு ‘மர்ம’ கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு பிணத்தை பஸ் நிறுத்தத்தில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண்ணுடன் கள்ளத் தொடர்பு விவகாரமா? அல்லது தொழில் போட்டியா? முன்விரோதம் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3–க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment