Saturday, September 13, 2014
பல்லடம் நகராட்சி கமிஷனர் நாராயணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வியாபாரிகள் உள்பட 75 பேர் நேற்று மாலை நகராட்சி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்த செல்வராஜ், தி.மு.க. நகர செயலாளர் பழனிசாமி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் தாசில்தார் அம்சவேணி, இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தினர்.
வியாரிகள் தரப்பில் முத்துமீரான் என்பவர் கூறும்போது,
கடைக்கு வந்த சரக்கை இறக்கிக்கொண்டிருந்தோம். அப்போது நகராட்சி வாகனத்தில் வந்த கமிஷனர் சரக்கு இறக்கும் வாகனத்தை உடனே எடுக்குமாறு ஒருமையில் தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் ஆய்வு என்ற பெயரில் கடைக்குள் வந்து உணவு பொருட்களை சேதப்படுத்துகிறார்.
பொறுப்புள்ள அதிகாரியாக செயல்படாத கமிஷனர் நாராயணனை மாற்ற வேண்டும். மேலும் அவர் மீது போலீசில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டு என்றனர்.
இது குறித்து கேட்ட தாசில்தார் அம்சவேணி வியாபாரிகளிடம் கூறுகையில்,
புகார் கொடுங்கள் அது கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும். போலீசாரும் ரசீது வழங்குவார்கள் என்று உறுதியளித்தார். சமாதானம் அடையாத வணிகர் சங்கத்தினர் இன்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி பல்லடத்தில் இன்று 1000–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கமிஷனர் நாராயணன் கூறும்போது, பள்ளி அருகே ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். உரிமம் இல்லாமல் கடை நடத்தி வருகிறார்கள். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வதை தடுத்தேன்.
என்.ஜி.ஆர். ரோடு நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 40 கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் தான் வந்தது. மறு ஏலம் நடத்தி ரூ.65 லட்சம் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். தேவையில்லாமல் பிரச்சினை கிளப்பிய 2 பேர் மீது போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.
கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment