Saturday, September 13, 2014
பல்லடம் நகராட்சி கமிஷனர் நாராயணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வியாபாரிகள் உள்பட 75 பேர் நேற்று மாலை நகராட்சி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்த செல்வராஜ், தி.மு.க. நகர செயலாளர் பழனிசாமி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் தாசில்தார் அம்சவேணி, இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தினர்.
வியாரிகள் தரப்பில் முத்துமீரான் என்பவர் கூறும்போது,
கடைக்கு வந்த சரக்கை இறக்கிக்கொண்டிருந்தோம். அப்போது நகராட்சி வாகனத்தில் வந்த கமிஷனர் சரக்கு இறக்கும் வாகனத்தை உடனே எடுக்குமாறு ஒருமையில் தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் ஆய்வு என்ற பெயரில் கடைக்குள் வந்து உணவு பொருட்களை சேதப்படுத்துகிறார்.
பொறுப்புள்ள அதிகாரியாக செயல்படாத கமிஷனர் நாராயணனை மாற்ற வேண்டும். மேலும் அவர் மீது போலீசில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டு என்றனர்.
இது குறித்து கேட்ட தாசில்தார் அம்சவேணி வியாபாரிகளிடம் கூறுகையில்,
புகார் கொடுங்கள் அது கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும். போலீசாரும் ரசீது வழங்குவார்கள் என்று உறுதியளித்தார். சமாதானம் அடையாத வணிகர் சங்கத்தினர் இன்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி பல்லடத்தில் இன்று 1000–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கமிஷனர் நாராயணன் கூறும்போது, பள்ளி அருகே ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். உரிமம் இல்லாமல் கடை நடத்தி வருகிறார்கள். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வதை தடுத்தேன்.
என்.ஜி.ஆர். ரோடு நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 40 கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் தான் வந்தது. மறு ஏலம் நடத்தி ரூ.65 லட்சம் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். தேவையில்லாமல் பிரச்சினை கிளப்பிய 2 பேர் மீது போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.
கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment