Saturday, September 13, 2014
தாராபுரம் நகரில் 13 டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருப்பூர் மாவட்ட மண்டல டாஸ்மாக் மேலாளர் கடந்த 3 நாட்களாக பல்லடம், அவினாசி, திருப்பூர், டவுன் பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் தாராபுரம் மதுக்கடைகளில் ஆய்வு செய்தார்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சாதாரண குவார்ட்டர் பாட்டில் ரூ.90 முதல் ரூ.95 ஆகவும், பீர் பாட்டிலுக்கு 110 ரூபாயாவும் விற்பனை செய்து வருகின்றனர். மண்டல மேலாளர் ஆய்வுக்கு வருகிறார் என்று தெரிந்ததும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கே விற்பனை செய்தனர்.
வழக்கம்போல் சரக்கு வாங்கும் குடிமகன் ஆய்வின்போது ரூ.95 கொடுத்து ஒரு குவார்ட்டர் கேட்டார். ரூ.90 தான் ஒரு குவார்ட்டர் என்று விற்பனையாளர் ரூ.5 –ஐ திருப்பி கொடுத்தார். மேலும் இங்கு பார் இல்லை.
வெளியில் மது அருந்திக்கொள்ளுங்கள் என்று மரியாதையாக டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறினார். என்ன இன்றைக்கு மரியாதையெல்லாம் பலமாக உள்ளது என்று அந்த குடிமகன் ஆச்சரியமடைந்தார். சிறிது நேரத்திலேயே விபரம் அறிந்த குடிமகன்கள் பல நாட்கள் தேங்கி வைத்திருந்த தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
பஸ் நிலைய மதுக்கடைக்கு பார் இல்லை. பக்கத்திலேயே டம்ளர், தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கின்றனர்.
எப்போதுமே அரசு நிர்ணய விலைக்கு மது விற்பனை செய்வதில்லை. ரூ.5 முதல் அதிகம் கொடுத்துத் தான் வாங்குகிறோம். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மது விற்பனையாளரை அழைத்து கடும் எச்சரிக்கை செய்தனர்.
சில கடைகளில் பெரிய ஊசிகொண்டு திறந்து அதனுள் உள்ள சரக்கை உறிஞ்சி எடுத்த பின்னர் அதற்கு பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 4 நாட்களாக தாராபுரம் குடிமகன்களுக்கு சரியான விலையில் கலப்படம் இல்லாமல் சரக்கு கிடைத்து வருகிறது.
மகிழ்ச்சியில் உள்ள தாராபுரம் குடிமகன்களுக்கு இது நீடிக்குமா? அல்லது அதிகாரிகள் சென்றதும் மீண்டும் தொடருமா? என்று தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment