Saturday, September 13, 2014
தாராபுரம் நகரில் 13 டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருப்பூர் மாவட்ட மண்டல டாஸ்மாக் மேலாளர் கடந்த 3 நாட்களாக பல்லடம், அவினாசி, திருப்பூர், டவுன் பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் தாராபுரம் மதுக்கடைகளில் ஆய்வு செய்தார்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சாதாரண குவார்ட்டர் பாட்டில் ரூ.90 முதல் ரூ.95 ஆகவும், பீர் பாட்டிலுக்கு 110 ரூபாயாவும் விற்பனை செய்து வருகின்றனர். மண்டல மேலாளர் ஆய்வுக்கு வருகிறார் என்று தெரிந்ததும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கே விற்பனை செய்தனர்.
வழக்கம்போல் சரக்கு வாங்கும் குடிமகன் ஆய்வின்போது ரூ.95 கொடுத்து ஒரு குவார்ட்டர் கேட்டார். ரூ.90 தான் ஒரு குவார்ட்டர் என்று விற்பனையாளர் ரூ.5 –ஐ திருப்பி கொடுத்தார். மேலும் இங்கு பார் இல்லை.
வெளியில் மது அருந்திக்கொள்ளுங்கள் என்று மரியாதையாக டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறினார். என்ன இன்றைக்கு மரியாதையெல்லாம் பலமாக உள்ளது என்று அந்த குடிமகன் ஆச்சரியமடைந்தார். சிறிது நேரத்திலேயே விபரம் அறிந்த குடிமகன்கள் பல நாட்கள் தேங்கி வைத்திருந்த தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
பஸ் நிலைய மதுக்கடைக்கு பார் இல்லை. பக்கத்திலேயே டம்ளர், தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கின்றனர்.
எப்போதுமே அரசு நிர்ணய விலைக்கு மது விற்பனை செய்வதில்லை. ரூ.5 முதல் அதிகம் கொடுத்துத் தான் வாங்குகிறோம். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மது விற்பனையாளரை அழைத்து கடும் எச்சரிக்கை செய்தனர்.
சில கடைகளில் பெரிய ஊசிகொண்டு திறந்து அதனுள் உள்ள சரக்கை உறிஞ்சி எடுத்த பின்னர் அதற்கு பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 4 நாட்களாக தாராபுரம் குடிமகன்களுக்கு சரியான விலையில் கலப்படம் இல்லாமல் சரக்கு கிடைத்து வருகிறது.
மகிழ்ச்சியில் உள்ள தாராபுரம் குடிமகன்களுக்கு இது நீடிக்குமா? அல்லது அதிகாரிகள் சென்றதும் மீண்டும் தொடருமா? என்று தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment