Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
தி.மு.க. ஆட்சியில் சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 2010–ம் ஆண்டு மார்ச் 13–ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு சட்டசபை கூட்டத் தொடர்களும் நடத்தப்பட்டன.
2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் இருந்து சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அறக்கப்பட்டது.
நீதிபதி ரெகுபதி கமிஷன், புதிய தலைமை செயலகம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டதாலும், அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்அமைச்சராக இருந்ததாலும், இந்த கட்டிடம் விவகாரம் குறித்து அவரிடமும் விசாரணை நடத்தி, வாக்கு மூலத்தை பதிவு செய்ய ஒரு நபர் கமிஷன் முடிவு செய்தது.
இதையடுத்து, நீதிபதி ரெகுபதி கமிஷன் முன்பு ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கருணாநிதி சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் விசாரணை தொடர்பான ஆவணங்கள் தன் கட்சிக்காரருக்கு தேவைப்படுகிறது. எனவே அதை வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ரெகுபதி, ‘அதுபோன்ற ஆவணங்களை கருணாநிதி நேரில் ஆஜராகும்போது அவரிடம் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று கருணாநிதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...

0 comments:
Post a Comment