Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
தி.மு.க. ஆட்சியில் சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 2010–ம் ஆண்டு மார்ச் 13–ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு சட்டசபை கூட்டத் தொடர்களும் நடத்தப்பட்டன.
2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் இருந்து சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அறக்கப்பட்டது.
நீதிபதி ரெகுபதி கமிஷன், புதிய தலைமை செயலகம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டதாலும், அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்அமைச்சராக இருந்ததாலும், இந்த கட்டிடம் விவகாரம் குறித்து அவரிடமும் விசாரணை நடத்தி, வாக்கு மூலத்தை பதிவு செய்ய ஒரு நபர் கமிஷன் முடிவு செய்தது.
இதையடுத்து, நீதிபதி ரெகுபதி கமிஷன் முன்பு ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கருணாநிதி சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் விசாரணை தொடர்பான ஆவணங்கள் தன் கட்சிக்காரருக்கு தேவைப்படுகிறது. எனவே அதை வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ரெகுபதி, ‘அதுபோன்ற ஆவணங்களை கருணாநிதி நேரில் ஆஜராகும்போது அவரிடம் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று கருணாநிதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment