Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
தி.மு.க. ஆட்சியில் சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 2010–ம் ஆண்டு மார்ச் 13–ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு சட்டசபை கூட்டத் தொடர்களும் நடத்தப்பட்டன.
2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் இருந்து சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அறக்கப்பட்டது.
நீதிபதி ரெகுபதி கமிஷன், புதிய தலைமை செயலகம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டதாலும், அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்அமைச்சராக இருந்ததாலும், இந்த கட்டிடம் விவகாரம் குறித்து அவரிடமும் விசாரணை நடத்தி, வாக்கு மூலத்தை பதிவு செய்ய ஒரு நபர் கமிஷன் முடிவு செய்தது.
இதையடுத்து, நீதிபதி ரெகுபதி கமிஷன் முன்பு ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கருணாநிதி சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் விசாரணை தொடர்பான ஆவணங்கள் தன் கட்சிக்காரருக்கு தேவைப்படுகிறது. எனவே அதை வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ரெகுபதி, ‘அதுபோன்ற ஆவணங்களை கருணாநிதி நேரில் ஆஜராகும்போது அவரிடம் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று கருணாநிதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment