Friday, September 05, 2014
டெல்லியில் ஆட்சி அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், பா.ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதாவின் கூட்டணியான அகாலி தளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தது. காங்கிரஸ் 8 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும், சுயேச்சைக்கும் தலா ஒரு இடமும் கிடைத்தன.காங்கிரஸ் ஆதரவுடன் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி 47 நாட்கள் மட்டுமே நீடித்தது. மாநிலத்தில் வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இதன்பின்பு, அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி எடுத்து வந்த தொடர் முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிலையில், 29 உறுப்பினர்களுடன் தனிபெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவை டெல்லியில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கு, ஜனாதிபதியிடம் டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி ஆளுநர் பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று டெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உப்தாயா தெரிவித்துள்ளார். இதனிடையே பாரதீய ஜனதா அரைகுறையான அரசை உருவாக்க எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிப்பதாகவும், துணை நிலை ஆளுநர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் ,பாரதீய ஜனதாவின் ஆணையின் பேரில் துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆஸ்தோஷ் தெரிவித்துள்ளர்.
டெல்லியில் மறுதேர்தல் நடத்த கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசரணை வரும் 9 ஆம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment