Saturday, September 06, 2014
On Saturday, September 06, 2014 by Anonymous in ஈரோடு
திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்றத் தலைவர் ரூபி சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் கந்தசாமி, தமிழ் சங்கச் செயலாளர் ப.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில், திருவள்ளுவர் சிலை உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைத்தால், சாலை அகலப்படுத்தும் போது இடையூறு ஏற்படும். எனவே, மணிமண்டபம் அமைக்க வேறு இடம் ஒதுக்கித் தருவது குறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் மாற்று இடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந் நிகழ்ச்சியில், மாநில கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் ப.கோபாலகிருஷ்ணன், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் சேமலையப்பன், கொங்கு கந்தசாமி, யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment