Thursday, September 18, 2014
பி.எஸ்.என்.எல். புதிய சிம்கார்டு வாங்கினால் உடனடியாக பேசும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வசதி
பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் நேற்று பி.எஸ்.என்.எல். புதிய சிம் கார்டு வாங்கினால் அதை உடனடியாக செயல்படுத்தும் வசதியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை நகரில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு பயன்படுத்துகிறார்கள். 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். இணைய தளவசதி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல்.லேண்ட் லைன் போன் வைத்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். சிம்கார்டை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சிம் கார்டு வாங்கினால் உடடினயாக அந்த சிம்கார்டு செயல்பட (ஆக்டிவேசன்) தொடங்கும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
முதலில் www.cymn.bsnl.co.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான புதிய எண் கொண்ட பி.எஸ்.என்.எல் சிம்கார்டை தேர்ந்து எடுங்கள்.
சேவை மையம்
பின்னர் அதே ஆன்லைனில் உங்கள் முகவரி, அடையாள அட்டை போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவியுங்கள். இவ்வாறு அதில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துவிட்டு அது கொடுக்கும் எண்ணை கொண்டு அருகில் உள்ள தொலைபேசி சேவை மையத்திற்கு செல்லுங்கள். சென்னையில் 50 சேவை மையங்கள் உள்ளன.
சேவை மையத்திற்கு சென்று, நீங்கள் ஆன்லைனில் சிம்கார்டை தேர்ந்து எடுத்ததற்கான பதிவு எண்ணை தெரிவியுங்கள். மேலும் சேவை மையத்தில் நீங்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்த அனைத்து அசல் சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அனைத்து ஆவணங்களும் உண்மை என்ற பட்சத்தில் உடனடியாக உங்கள் சிம் கார்டு செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முதன்மை பொதுமேலாளர்கள் கே.கே.வேலு, என்.பூங்குழலி, பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
100 வருடம் தொலைபேசி
பின்னர் சென்னையில் 100 வருடமாக தொலைபேசி வைத்து பயன்படுத்தி வரும் ரமேஷ் சி.குமார் என்பவருக்கு பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் சார்பில் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கவுரவப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment