Saturday, October 11, 2014
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் இன்று பகல்–இரவு ஆட்டமாக நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியான ஆட்டத்தை கடைபிடித்தது. 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 116 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா தரப்பில் முகம்மது சமி 66 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment