Saturday, October 11, 2014
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வணிக நிறுவ னங்கள், தினசரி சந்தை, பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு– தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை உள்ளன. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் அரசு மற்றும் தனியார் வாகனங் களில் மார்த்தாண்டம் வந்து செல்கிறார்கள். எனவே, மார்த்தாண்டம் நகரில் எப்போதும், வாகன நெருக் கடியும், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமும், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது, பஸ் நிலையத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை பல நேரங்களில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளை பார்த்து குரைப்பது, கடிக்க துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும், நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு வாகனங்களின் குறுக்காகவும், பயணிகள் மத்தியிலும் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் அஞ்சி ஓடுகிறார்கள். மேலும், தாறுமாறாக ஓடும் நாய்கூட்டம் பல வேளைகளில் வாகனங்களின் குறுக்காக பாய்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடும் போது விபத்துகள் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment