Friday, November 21, 2014
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 30–ந் தேதி கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திச்செல்வதாக குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி 175 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக உடுமலை வீதம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(வயது 45), இளங்கோவன்(33), ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம்(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே எரிசாராயம் பதுக்கியது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே ஜோதிமணி, இளங்கோவன், அருள்பிரகாசம் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் ஆலோசனையின் பேரில் குடிமங்கலம் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை குடிமங்கலம் போலீசார் வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...
-
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு...

0 comments:
Post a Comment