Thursday, November 13, 2014
On Thursday, November 13, 2014 by Unknown in Break
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் ஏரி–குளங்கள் நிரம்பின. மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பக்கூடிய வீராணம் ஏரியும் நிரம்பியது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 45.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இடையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளதால் கடலூர் டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்க வீராணம் ஏரியில் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 44.40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி வைத்து கொண்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும் வி.எம்.எஸ். மதகு மூலம் 555 கன அடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 629 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment