Thursday, November 13, 2014
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சோலையார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அதிசயமணி. இவரது மகன் ஜெப்ரிபான் (வயது 24). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜெப்ரிபானும் அதே பகுதியை சேர்ந்த ஜெனிபர் (24) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணமான பின்பு ஜெப்ரிபான் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெனிபர் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு ஜெனிபர் மற்றும் அவரது தாய் ராஜபரிமளம் ஆகியோரை ஜெப்ரிபான் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த 2 பேரும் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெப்ரிபானை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைதான ஜெப்ரிபான் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் எதிர்ப்பை மீறி நான் ஜெனிபரை காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கும் எனது மனைவிக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்படும். அப்போதெல்லாம் ஜெனிபர் என்னிடம் கோபித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். அந்த சமயங்களில் நான் ஜெனிபர் வீட்டிற்கு சென்று அவளை அழைத்தேன். ஆனால் ஜெனிபரின் பெற்றோர் என்னுடன் அனுப்ப மறுத்தனர். இது போன்று பல முறை இந்த சம்பவங்கள் நடந்துள்ளது.
கடந்த வாரமும் எனது மனைவி என்னிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நான் பல முறை சென்று அவளை அழைத்தேன். ஆனால் வரவில்லை. அவளது பெற்றோரும் அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று இரவு எனது சகோதரர் பயிற்சி பெறுவதற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்த மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டேன். வெளியூருக்கு தப்பிசெல்ல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment