Wednesday, December 03, 2014
பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை பால்காரர் சுரேஷ், குடியாத்தம் நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம் ஆகியோர் கொலை வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.இந்த கொலை வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரவாதிகள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்குகளின் விசாரணை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்காக 3 பேரும் பலத்த போலீஸ் காவலுடன் தனித்தனி வாகனங்களில் வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். இதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்து, இங்கிருந்து பாதுகாப்பாக பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், நேற்று காலை 9 மணிக்கு தீவிரவாதிகள் 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment