Wednesday, December 03, 2014
பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை பால்காரர் சுரேஷ், குடியாத்தம் நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம் ஆகியோர் கொலை வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.இந்த கொலை வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரவாதிகள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்குகளின் விசாரணை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்காக 3 பேரும் பலத்த போலீஸ் காவலுடன் தனித்தனி வாகனங்களில் வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். இதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்து, இங்கிருந்து பாதுகாப்பாக பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், நேற்று காலை 9 மணிக்கு தீவிரவாதிகள் 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment