Friday, December 12, 2014
அந்நிய முதலீட்டை 49 சதமாக உயர்த்த மோடி அரசு முடிவு: திருப்பூரில் எல்ஐசி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டுத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அடுத்த வாரம் இம்மசோதாவை தாக்கல் செய்யவும் மோடி அரசு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதற்கு உடந்தையாக உள்ளது. எனவே இதை எதிர்த்து, காப்பீட்டுத் துறையைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளைச் செயலாளர் கே.ரகுநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கண்டனம் முழங்கினர். மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த முடிவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி காப்பீட்டு கழக முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கே.ஜெயராமன், பி.சி.நரசிம்மன் ஆகியோர் உரையாற்றினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...
-
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும...
0 comments:
Post a Comment