Wednesday, December 17, 2014
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த குமார் பெயரில் அந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
அதில் உடனடியாக விசாரணையை முடித்துவிட்டு மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் உயிருடன் திரும்ப முடியாது. இதையும் மீறி தொந்தரவு கொடுத்தால் கிரானைட் குவாரியில் போட்டு சமாதியாக்கி விடுவோம்.
என் மனைவி பிரேமா ராணி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். அவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணி இட மாறுதலும் வாங்கித் தர வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து சகாயம், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு புகார் அனுப்பினார். மதுரை நகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், இந்த கொலைமிரட்டல் கடிதம் குறித்து சகாயத்திடம் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கிரானைட் அதிபர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. உண்மையில் மிரட்டல் கடிதம் எழுதுபவர்கள் தங்கள் பெயரை அந்த கடிதத்தில் குறிப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த கடிதத்தில் குமார், அவரது மனைவி பிரேமாராணி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து மதுரை மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் விசாரணை நடத்தப்பட்டது. கொடுமுடியில் உள்ள குமார், அவரது மனைவி பிரேமா ராணி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை மிரட்டல் கடிதத்திற்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது.
கடந்த தீபாவளி சமயத்தில் சேலம் போலீசாருக்கு குமார் பெயரில் அனுப்பப்பட்ட கடிதத்தில் குண்டு வைக்க போவதாக எழுதப்பட்டு இருந்தது. எனவே குமார் குடும்பத்தை பிடிக்காத சிலர் அவர்களை ஏதாவது பிரச்சினையில் சிக்க வைக்க வேண்டும் என்று சதி செயலில் இந்த கடிதங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சகாயத்திற்கும் வந்துள்ள கடிதம் இந்த பின்னணியில் எழுதப்பட்டதாகவே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடிதத்தை அனுப்பியது யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலைமிரட்டல் வந்துள்ளதையடுத்து சகாயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும்போது சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment