Wednesday, December 17, 2014
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த குமார் பெயரில் அந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
அதில் உடனடியாக விசாரணையை முடித்துவிட்டு மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் உயிருடன் திரும்ப முடியாது. இதையும் மீறி தொந்தரவு கொடுத்தால் கிரானைட் குவாரியில் போட்டு சமாதியாக்கி விடுவோம்.
என் மனைவி பிரேமா ராணி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். அவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணி இட மாறுதலும் வாங்கித் தர வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து சகாயம், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு புகார் அனுப்பினார். மதுரை நகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், இந்த கொலைமிரட்டல் கடிதம் குறித்து சகாயத்திடம் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கிரானைட் அதிபர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. உண்மையில் மிரட்டல் கடிதம் எழுதுபவர்கள் தங்கள் பெயரை அந்த கடிதத்தில் குறிப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த கடிதத்தில் குமார், அவரது மனைவி பிரேமாராணி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து மதுரை மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் விசாரணை நடத்தப்பட்டது. கொடுமுடியில் உள்ள குமார், அவரது மனைவி பிரேமா ராணி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை மிரட்டல் கடிதத்திற்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது.
கடந்த தீபாவளி சமயத்தில் சேலம் போலீசாருக்கு குமார் பெயரில் அனுப்பப்பட்ட கடிதத்தில் குண்டு வைக்க போவதாக எழுதப்பட்டு இருந்தது. எனவே குமார் குடும்பத்தை பிடிக்காத சிலர் அவர்களை ஏதாவது பிரச்சினையில் சிக்க வைக்க வேண்டும் என்று சதி செயலில் இந்த கடிதங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சகாயத்திற்கும் வந்துள்ள கடிதம் இந்த பின்னணியில் எழுதப்பட்டதாகவே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடிதத்தை அனுப்பியது யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலைமிரட்டல் வந்துள்ளதையடுத்து சகாயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும்போது சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சின்னாள் மனைவி காத்தாம்மாள் (வயது 40). இவரது மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையொட்டி த...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
0 comments:
Post a Comment