Sunday, December 21, 2014
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரிய வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வர்த்தகத்தில் ஈடுபடும் நைஜீரியர்கள் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது வழக்கம். பெரும்பாலான நைஜீரியர்களுக்கு விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதில்லை. விசா காலம் முடிந்த பின்னரும் அவர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்து வருகிறார்கள். இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் நைஜீரியர்களை போலீசார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தாலும் கூட ஆவணங்கள் இல்லாமல் நைஜீரியர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள கியாஸ் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட தகராறில் நைஜீரிய வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நைஜீரிய வாலிபர் பெயர் இசனேக் வி ஜிசிக்கோ(வயது 31) என்பதும், நைஜீரிய நாடு இமாகு ஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் தங்கியிருந்து பனியன் வர்த்தகம் செய்து வந்ததும், ஆனால் அவரிடம் பாஸ்போர்ட், விசா, மஞ்சள் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்ததாக இசனேக் வி ஜிசிக்கோவை திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் கைது செய்து திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2–ல் ஆஜர்படுத்தினார்கள். இசனேக் வி ஜிசிக்கோவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கோர்ட்டு முன் போலீஸ் ஜீப்புக்குள் அவர் அமர்ந்து இருந்தார். மாஜிஸ்திரேட்டு வேலுச்சாமி கோர்ட்டில் இருந்து வெளியே நின்ற ஜீப்புக்கு அருகே வந்து இசனேக் வி ஜிசிக்கோவிடம் விசாரணை நடத்தி விட்டு, பின்னர் அவரை வருகிற 31–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment