Sunday, December 21, 2014
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரிய வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வர்த்தகத்தில் ஈடுபடும் நைஜீரியர்கள் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது வழக்கம். பெரும்பாலான நைஜீரியர்களுக்கு விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதில்லை. விசா காலம் முடிந்த பின்னரும் அவர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்து வருகிறார்கள். இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் நைஜீரியர்களை போலீசார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தாலும் கூட ஆவணங்கள் இல்லாமல் நைஜீரியர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள கியாஸ் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட தகராறில் நைஜீரிய வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நைஜீரிய வாலிபர் பெயர் இசனேக் வி ஜிசிக்கோ(வயது 31) என்பதும், நைஜீரிய நாடு இமாகு ஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் தங்கியிருந்து பனியன் வர்த்தகம் செய்து வந்ததும், ஆனால் அவரிடம் பாஸ்போர்ட், விசா, மஞ்சள் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்ததாக இசனேக் வி ஜிசிக்கோவை திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் கைது செய்து திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2–ல் ஆஜர்படுத்தினார்கள். இசனேக் வி ஜிசிக்கோவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கோர்ட்டு முன் போலீஸ் ஜீப்புக்குள் அவர் அமர்ந்து இருந்தார். மாஜிஸ்திரேட்டு வேலுச்சாமி கோர்ட்டில் இருந்து வெளியே நின்ற ஜீப்புக்கு அருகே வந்து இசனேக் வி ஜிசிக்கோவிடம் விசாரணை நடத்தி விட்டு, பின்னர் அவரை வருகிற 31–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment