Sunday, December 21, 2014
திருப்பூர் கொங்குமெயின் ரோடு எம்.எஸ்.நகர், கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் கருத்தராஜா(வயது 42). இவர் தனது மனைவி மகேஷ்வரியின் பெயரில் திருப்பூர் கொங்கு ரோடு எம்.எஸ்.நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம், ஏலச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு போன்றவை நடத்தி வந்ததுடன், அவற்றின் மூலம் 200–க்கும் மேற்பட்ட மக்களிடம் பல லட்சம் பணம் வசூலித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த நிதி நிறுவனம் திறக்கப்படாமல் உள்ளது. கருத்தராஜா, மகேஷ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். எனவே 2 பேரையும் பிடித்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment