Monday, January 05, 2015
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தது தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் தொழிலாளி அஜீத்குமார்(17). அவர், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பொங்கலூர் சாலை, கள்ளிமேடு என்ற இடத்தில் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காயமடைந்தார். அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், வழியிலேயே அவரது உடல் பலகீனமடைந்திருப்பதாகக் கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், திருப்பூர் பாண்டியன் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு, அஜித்குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அஜித்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, அவரது உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டனர். அதன்பின், சனிக்கிழமை அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அஜித்குமாரின் தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகி மலர்மன்னன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பன்னீர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment