Monday, January 05, 2015
நள்ளிரவு நேரத்தில் மர்மமான முறையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
உடுமலை குமரன் நகரில் வசித்து வருபவர் பாலமுரளிகிருஷ்ணன் (37). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக வேன் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு, வேன்னை நிறுத்தி விட்டு பாலமுரளிகிருஷ்ணன் தூங்கச் சென்றாராம். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அங்கு கூடிய அப்பகுதி மக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸார் கூறியது:
வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். வேன் உரிமையாளர் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு அண்மைக்காலமாக ஒரு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment