Thursday, January 01, 2015
ஆண்மை பலம் பெருக வேண்டும் என்பதற்காக புலிகளைக் கொன்று தின்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த வியாபாரி சிபாட். இவர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் ஆண் புலிகளை வேட்டையாடி அவற்றின் ஆண் உறுப்பு, மற்றும் இறைச்சியைச் சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் புலிகளின் ரத்தத்தை மதுவாகக் குடித்து மகிழ்ந்தார். சிபாட் தனது ஆண்மை சக்தியைப் பெருக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தான் மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவ்வப்போது விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் புலியைக் கொன்று இறைச்சியைத் துண்டாக்கும் காட்சிகள் செல்போனில் படமாக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சிபாட் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபாட்டுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 14 பேருக்கு 5 மற்றும் ஆறரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
உலக அளவில் காடுகளில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இது போன்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment