Thursday, January 01, 2015
சீனாவின் ஷாங்காய் நதிக்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஷாங்காயில் உள்ள பண்ட் நதிக்கரையில் புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக நேற்றிரவு மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயன்றபோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்ட் நதிக்கரையிலிருந்து ஷென் யி சதுக்கம் வரையில் கூட்ட நெரிசல் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான உரிய காரணம் கண்டறியப்படவில்லை.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பண்ட் நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தோடு வழக்கமாக நதிக்கரையில் நடத்தப்படும் 3டி லேசர் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தாண்டியும் நிகழ்ந்துள்ள இந்த விபத்து, புத்தாண்டு தொடக்கத்தில் சீன மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment