Thursday, January 01, 2015
சீனாவின் ஷாங்காய் நதிக்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஷாங்காயில் உள்ள பண்ட் நதிக்கரையில் புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக நேற்றிரவு மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயன்றபோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்ட் நதிக்கரையிலிருந்து ஷென் யி சதுக்கம் வரையில் கூட்ட நெரிசல் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான உரிய காரணம் கண்டறியப்படவில்லை.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பண்ட் நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தோடு வழக்கமாக நதிக்கரையில் நடத்தப்படும் 3டி லேசர் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தாண்டியும் நிகழ்ந்துள்ள இந்த விபத்து, புத்தாண்டு தொடக்கத்தில் சீன மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment