Wednesday, January 14, 2015
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகிப்புத்தன்மையற்ற மதவெறி சக்திகளை கண்டித்து திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்தும், எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு, படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் செ.நடேசன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், கவிஞர் மகுடேஸ்வரன், ஆசிரியர் சிவகாமி, இளஞாயிறு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment