Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News
ரஜினி, விஜய், அஜீத், சிம்பு என முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்த சந்தானம், கதாநாயகனாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ அவருக்கு தனி ஹீரோ அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
இப்படத்திற்கு பிறகு அவர் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தது. இருந்தாலும், அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் ஏற்கெனவே 4 படங்கள் வெற்றியடைந்ததால் இந்த படத்திலும் அந்த கூட்டணி இணைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருப்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடிக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து முழுநேர கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சந்தானம். இவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...
-
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு...
0 comments:
Post a Comment