Monday, January 12, 2015
கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுவிட்டதாக இந்தோனேஷியா மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா நாட்டின் சுரபவாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர் ஆசியா விமானம், ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தெரியவந்தது.
விபத்துக்குள்ளானவர்களில் 40 க்கும் மேற்பட்டோர்களின் சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும், விமானத்தின் சிதைந்த பாகங்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த விமானத்தின் வால்பகுதி ஜாவா கடலுக்கு அடியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வால்பகுதியை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிரேன் உதவியுடன் கடலில் இருந்து மீட்கப்பட்டது.
ஆனால் வால் பகுதியில் உள்ள கருப்புப் பெட்டி கிடைத்தால்தான் விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதால் கருப்புப் பெட்டியை கண்டறியும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கிய ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்தோனேஷியா மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மீட்புக்குழு தலைமை அதிகாரி, ’நாங்கள் விமான தகவல் பதிவு செய்யும் கருவி என அழைக்கப்படும் கருப்பு பெட்டியைக் கடலில் இருந்து மீட்பதில் வெற்றி பெற்றுவிட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment