Wednesday, January 14, 2015
பொங்கல் மற்றும் இதர இனிப்பு, பலகாரங்ளை கால்நடைகளுக்கு வழங்குவதால் அவற்றுக்கு அமிலநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருப்பூர் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கால்நடைகள் வழக்கமாக உண்ணும் வைக்கோல், தீவனங்களை தவிர்த்து மாவுப் பொருள்களையும், சர்க்கரை சத்து மிகுந்த பொருள்களையும் உண்பதால் அவற்றுக்கு அமிலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்குப் பின், கால்நடைகளை இந்நோய் அதிகளவில் தாக்குவதாக மருத்துவக் கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது.
இந்நோய்த் தாக்குதலுக்குள்ளான கால்நடைகளின் வயிறு வீóக்கம், வயிற்றில் அதிகளவு நீர்த்தேக்கம், நாக்கு வறண்டு தாகம் எடுத்தல், வயிறு அசைவின்மை, தீவனம் உண்ணாமை, சிறுநீர் வெளியேறுவது குறைதல், அதிதீவிர நிலையில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கண்தெரியாமை, தலையால் மோதிக் கொள்ளுதல், ஒருவித அமைதி நிலை போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
எனவே, கால்நடைகள் பொங்கல், பாயசம் மற்றும் பலகாரங்களை கால்நடைகள் உண்பதற்கு கொடுக்கக்கூடாது. ஒருவேளை பலகாரம், இனிப்புகளை கால்நடைகளுக்கு கொடுத்த பின் அவற்றின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment