Tuesday, February 17, 2015
மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததாக பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கீழையூர், கீழவளவு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த கிரானைட் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுத்து பதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கிரானைட் நிறுவனங்களை சேர்ந்த நாகூர் அனீபா, பி.எல்.படிக்காசு, சோலைராஜன், மோகன், சேதுராமன் ஆகிய 5 பேரையும் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரை 1–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி கே.எச்.இளவழகன் விசாரித்து, படிக்காசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
நிபந்தனையில், பி.எல்.படிக்காசு 2 கோடி ரூபாய் ரொக்கமாக கோர்ட்டில் வைப்பீடாக வைக்க வேண்டும் என்றும், ரூ.2 கோடியே 38 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மோகன், நாகூர் அனீபா ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். சோலைராஜனுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
0 comments:
Post a Comment