Tuesday, February 17, 2015
மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததாக பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கீழையூர், கீழவளவு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த கிரானைட் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுத்து பதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கிரானைட் நிறுவனங்களை சேர்ந்த நாகூர் அனீபா, பி.எல்.படிக்காசு, சோலைராஜன், மோகன், சேதுராமன் ஆகிய 5 பேரையும் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரை 1–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி கே.எச்.இளவழகன் விசாரித்து, படிக்காசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
நிபந்தனையில், பி.எல்.படிக்காசு 2 கோடி ரூபாய் ரொக்கமாக கோர்ட்டில் வைப்பீடாக வைக்க வேண்டும் என்றும், ரூ.2 கோடியே 38 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மோகன், நாகூர் அனீபா ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். சோலைராஜனுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment