Monday, March 30, 2015
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் அரிசிக்கடை வீதியில் 2067 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்
தமிழக மக்கள் அனைவரும் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என அனைத்து கோவில்களிலும் பிரார்த்தனைகள் நடத்தும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வழங்கி24 மணி நேரத்தில் 20 மணி நேரம் பாடுபட்டு கொண்டிருக்கிற ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 2 ஆயிரத்து 67 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்திய திருநாட்டிலேயே மக்கள் திரண்டு பிறந்தநாள் கொண்டாடும் அளவுக்கு எந்த தலைவரும் இருந்ததில்லை.மக்கள் மீது ஜெயலலிதா வைத்துள்ள அன்பின் காரணமாக அவரது பிறந்த நாள் ஒரு மாதத்துக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் மேம்பட வேண்டும் என்றும், தமிழ் நாட்டு மக்களின் வாழ்கை மேம்படவும் கடந்த 4 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை கொடுத்து கொண்டிருக்கிற மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நல உதவிகள் வழங்கி எளிமையாக கொண்டாட ஆணையிட்டு இருக்கிறார்.அண்ணா தி.மு.க.தொண்டர்களின் பிரார்த்னைகள் வீண் போகாது. அவை நிறைவேறி விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நாள் விரைவில் வர இருக்கிறது. அந்நாள் தமிழக மக்களுக்கு பொற்காலம் துவங்கும் நாள் எனவே, அவருக்கு உங்கள் ஆதரவு என்றும் இருக்கு வேண்டும்.
தமிழகம் மேம்பட வேண்டும் என்றும், தமிழ் நாட்டு மக்களின் வாழ்கை மேம்படவும் கடந்த 4 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை கொடுத்து கொண்டிருக்கிற மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நல உதவிகள் வழங்கி எளிமையாக கொண்டாட ஆணையிட்டு இருக்கிறார்.அண்ணா தி.மு.க.தொண்டர்களின் பிரார்த்னைகள் வீண் போகாது. அவை நிறைவேறி விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நாள் விரைவில் வர இருக்கிறது. அந்நாள் தமிழக மக்களுக்கு பொற்காலம் துவங்கும் நாள் எனவே, அவருக்கு உங்கள் ஆதரவு என்றும் இருக்கு வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி பேசியதா வது:-
பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67வது பிறந்தநாளில் மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கான மார்பக புற்று நோய் கண்டுபிடிப்பு முகாம் நடை பெற்றது. அந்த முகாமில் 16 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டு, 914 பேர் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டு இருகின்றனர். இது ஒரு கின்னஸ் சாதனைதான், கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் விரைவில் முதலமைச்சர் அரியணையில் அமருவார் கோடன கோடி இதய மக்கள் அவருக்கு பக்க பலமாக இருந்து வாழ்த்துவார்கள். இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ.,தனது வாழ்த்துரையில்,
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் 32 மாவட்டங்களிலும் இதுவரை 5 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பஸ் டிரைவர்கள் மீது சாற்றப்படும் குற்றமாக விபத்து கால பிரச்சினைகள் தீர்க்க தொழிற்சங்கம் மூலம்ஜெயலலிதா சரி செய்து உள்ளார். தொழிலாளர்களுக்காக அண்ணா தொழிற்சங்கத்திற்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளார். தொழிலாளர்களின் நம்பிக்கை வீண் போகாது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 1000 லிருந்து 1500 ரூபாய் வரையிலான சம்பள உயர்வை மக்கள்முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசு வழங்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பல்லடம் பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் வடக்கு தொகுதி செயலாளர் ஜான், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கரைப்புதூர் நடராஜன், யு.எஸ்.பழனிசாமி, ஹரிஹரசுதன், டி.பார்த்திபன், அட்லஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார், எஸ்பி.என். பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், மாமன்ற உறுப்பினர்கள் அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் சி,.டி.சி.கிருஷணன் , ராஜசேகரன், பொன்னுசாமி, கிளைச் செயலாளர்கள் சி.டி.சி.ராஜேந்தி ரன், சரவணன், பழனியப்பன், ரவிக்குமார், உள்ளிட்டவர்களும், ஹோட்டல் சங்க நிர்வகிகள் வினோத்குமார், முபாரக், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...

0 comments:
Post a Comment