Friday, April 17, 2015
தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னாள் சிவன் கோயில் இருந்தது. அதனால் அதனை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆக்ரா நதிக்கரையில் அழகுடனும், கம்பீரத்துடனும் அமைந்திருக்கும் தாஜ்மஹால் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், காதலர்களின் புனித சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் முகலாய அரசர் ஷாஜகான், தனது காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக எழுப்பியதாக வரலாறு. இந்நிலையில்தான் இந்த தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க சொல்லி மனுதாக்கல் செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத்தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் ஐவர், நேற்று ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘உத்தரப்பிரதேசத்தின், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால்.
அந்த இடத்தில் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்னதாகவே அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன’ என தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சிறுபாண்மையினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. மேலும் தாஜ்மஹால் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மட்டுமானதாக பார்க்காமல், இந்திய தேசத்தினுடைய ஒன்றாகவே மக்கள் இதுவரை கருதி வருகின்றனர். இதுபோன்ற செயலால் நாட்டில் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தும் என நம்பலாம்.
தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சிறுபாண்மையினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. மேலும் தாஜ்மஹால் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மட்டுமானதாக பார்க்காமல், இந்திய தேசத்தினுடைய ஒன்றாகவே மக்கள் இதுவரை கருதி வருகின்றனர். இதுபோன்ற செயலால் நாட்டில் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தும் என நம்பலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment