Sunday, May 03, 2015
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நூல் திருடப்பட்ட வழக்கில் அனுப்பர்பாளையம் போலீஸார் இருவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (41). பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவரின் நிறுவனத்தில் வேலூர் பள்ளி கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) கமலக்கண்ணன் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவு குறித்து கணக்கை ஞானசேகர் சரிபார்த்துள்ளார்.
அப்போது, பனியன் நூல் இருப்பில் 5 ஆயிரத்து 300 கிலோ குறைந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவன மேலாளர் ஆறுமுகத்தை கேட்டபோது, அவருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ 12 லட்சம். இதுகுறித்து ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பனியன் நிறுவன மேலாளர் கமலக்கண்ணன் (38), உதவியாளர் மேட்டூர் தர்மலிங்கம் (33) ஆகியோரை கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
.jpg)
0 comments:
Post a Comment