Sunday, May 03, 2015
பல்லடம் வட்டாரத்தில் ஆட்டுக் குட்டிகளுக்கு ரத்தக் கழிச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்ததாக ஆடு வளர்ப்புத் தொழில் உள்ளது. இந்நிலையில் ரத்தக் கழிச்சல் நோய் பாதிப்பில் இருந்து ஆட்டுக் குட்டிகளைக் காப்பது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பல்லடம் அரசு கால்நடை மருந்தக மருத்துவர் நடராஜன் கூறியது:
ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதி, சூரிய ஒளி படும்படியாக இருக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் பிறப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பே, கொட்டகையின் தரைப் பகுதியை நான்கு அங்குலம் ஆழத்துக்குத் தோண்டி, பழைய மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, அதில் சரளை அல்லது பெருமணலை பரப்பி, சுண்ணாம்புத் தூளை தூவ வேண்டும். கொட்டகைக்குள் இருக்கும் தண்ணீர்த் தொட்டியை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
தரைப் பகுதி அதிக ஈரமில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை அடைக்கக் கூடாது. சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச வேண்டும். அதிக ஈரப்பதமின்றி, சிறிது உலர்ந்த தீவனங்களையே குட்டிகளுக்கு அளிக்க வேண்டும். குட்டி ஈன்றதும், தாயின் மடியை தண்ணீரால் கழுவிய பிறகே குட்டிகளை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். குட்டிகளை, தாயுடன் முதல் மூன்று நாள்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். பிறகு, பால் குடிக்க மட்டும் அனுமதித்து, குட்டிகளை தனியே அடைக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment