Sunday, May 03, 2015
திருப்பூர், : திருப்பூர் அடுத்துள்ள 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (29). கட்டிடத் தொழிலாளி, இவரது மனைவி பூங்கொடி. அதே பகுதியில் உள்ள தறி குடோனில் வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இவர்களது குழந்தை சிவராமகிருஷ்ணன் (2) தினேஷ்குமாரின் தாயார் கலைவாணியின் பராமரிப்பில் இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டருகே கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்றுள்ளான்.அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளான். குழந்தையை காணாது பதறிய பாட்டி கலைவாணி மற்றும் அக்கம், பக்கம் தேடியுள்ளார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கியபடி கிடந்தான். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, பூமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
.jpg)
0 comments:
Post a Comment