Saturday, May 02, 2015
பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விவேக், அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், சினிமா நாயகிகள் குறித்த தனது கவலையை வெளியிட்டார். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்தான் கணவனாக வேண்டும் என்று சொல்லும் நடிகைகள், காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகிறார்கள், தட்டிக் கழிக்கிறார்கள் என்றார்.
இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முதலில் வைத்தவர் தங்கர்பச்சான். அவர் காமெடி நடிகர் இல்லை என்றாலும் அவரது சீரியஸ் பேச்சுகளில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் யாரும் முன்வரவில்லை என்று, உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகப்போறதில்லை, ஆண் பிள்ளை பிறக்கப் போறதில்லை என்றெல்லாம் வசைபாடினார்.
கருணாஸ் அந்தளவுக்குப் போகவில்லை. என்றாலும் அவருக்கும் கதாநாயகிகள்தான் பிரச்சனை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஹீரோயின் கிடைப்பதில்லை. கருப்பா இருக்கிறதால எந்த நடிகையும் நடிக்க வரமாட்டேங்குறாங்க என்று நிற அரசியலை அவர் முன்வைத்தார். இப்போது விவேக்.
இவர்கள் அனைவருமே நடிகைகளைத்தான் குற்றம்சாட்டுகிறார்கள். இது நியாயமா என்பதுதான் நமது கேள்வி.
நடிக்க வருகிற நடிகைகள், அதிலும் அழகை முதலீடாக்கி கதாநாயகிகளாக வலம்வரும் யாரும் இங்கு கலைச்சேவை புரிய வரவில்லை. அழகு இருக்கிற காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து - அப்படி நடித்தால்தான் முன்னணி நாயகி ஆக முடியும் - நாலு காசு சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே. கொசுறாக புகழும் கிடைத்தால் ஓகே.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
0 comments:
Post a Comment