Saturday, May 02, 2015
தொடங்கிய சில வருடங்களிலேயே மிகப்பெரிய சரிவையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளது, விஜய் அவார்ட்ஸ். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அளிக்கும் இந்த திரைப்பட விருது கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
விஜய் தொலைக்காட்சி எந்தெந்தப் படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்குகிறதோ அந்தப் படங்களுக்கு மட்டுமே பிரதான விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், எந்த முன்னணி நடிகர் விழாவுக்கு வர சம்மதிக்கிறாரோ அவருக்கு ஒரு விருது நிச்சயம் உண்டு.
திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, சாதாரண பார்வையாளர்களே இதுவொரு சந்தர்ப்பவாத விருது என்று பேசத் தொடங்கினர். இந்த வருட விஜய் அவார்ட்ஸ் போலித்தனத்தின் உச்சத்தை தொட்டது.
முதலாவதாக விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் தொகுப்பாளினி என கூறப்படும் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பின்பக்கம் சூடு வைத்த குரலில் அவர் கத்தி கூச்சல் போடுகையில் ஆவியின் எழுப்புதல் கூட்டத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றும். அப்படியொரு குரல்வளம் அவருக்கு. தனது மைக் முழுங்கிய குரலில் அவர் கூப்பாடு போடும்போது பாதி வார்த்தைகள் புரிவதும் இல்லை.
இந்தமுறையும் டிடியின் திருவாய் இதேபோல்தான் மலர்ந்தது. கடுப்பான கே.எஸ்.ரவிக்குமாரும் மைக்கில் டிடி போலவே கத்திப் பேசி, "மைக்கில் பேசினாலே நன்றாக கேட்கும். அப்படியிருந்தும் கத்தி பேசுவது டிடி ஒருத்தர்தான்" என மேடையிலேயே கடுப்படித்தார்.
சென்ற வருடம் சிவ கார்த்திகேயன் அழுததை திரும்பத் திரும்ப விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடியது. அத்தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் என்பதால் சிவ கார்த்திகேயன் மீது அளவுகடந்த உரிமை எடுத்திருப்பார்கள் போல. "இந்த விழா விடியற்காலை 2 மணிவரை நடக்கும் குடிக்க தண்ணிகூட தரமாட்டாங்க. அடுத்தமுறை புளிசாதம் கட்டிட்டு வாங்க" என்று, விஜய் தொலைக்காட்சியையும்/ விஜய் அவார்ட்ஸையும் மேடையில் விமர்சித்தார்.
இந்த வருட விழாவின் இன்னொரு அவலம், இளையராஜாவை விழாவுக்கு அழைத்து விருது தராமலே அனுப்பியது. செவாலியே சிவாஜி விருது இந்த வருடம் இளையராஜாவுக்கு தருவதாகக் கூறி விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்தார். ஆனால், விருது வழங்கவில்லை. சிவாஜி குடும்பத்தினர் வந்த பிறகு விருது தருகிறோம் என்று அவரை உட்கார வைத்தார்கள். அப்போதும் யாரும் வரவில்லை. அதற்கு மேலும் காத்திருந்து விருது வாங்க அவர் என்ன அறிமுக இசையமைப்பாளரா? இல்லை விஜய் தொலைக்காட்சியின் வேலைக்காரரா?. பாதியிலேயே இளையராஜா விழாவிலிருந்து வாக் அவுட் செய்தார். இதேபோல் பல பேர்.
சிவாஜி குடும்பத்துக்கும் முறையான அழைப்பு இல்லை போலிருக்கிறது. கடைசிவரை அவர்களில் யாரும் விழாவில் தலைகாட்டவில்லை.
இந்தமுறையும் அவர்கள் ஒளிபரப்பு உரிமை வாங்கிய படங்களே அதிக விருதுகளை பெற்றன. அவர்களே தந்து அவர்களே வாங்கிக் கொள்ளும் விழா என்பது உறுதியான பிறகு மற்றவர்களுக்கு அங்கு என்ன வேலை?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
0 comments:
Post a Comment