Tuesday, January 12, 2016

On Tuesday, January 12, 2016 by Tamilnewstv in    

  திருச்சி  12.01.16



தமிழக அரசு மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் - மாநாட்டு திடலை பார்வையிட வந்த டி என் டி ஜே மாநில தலைவர் பேட்டி



திருச்சி பிராட்டியூர் ரெட்டமலை திடலில் வருகின்ற 31 ம் தேதி தமிழ்நாடு தவுஹித் ஜமா  அத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள திடலில்  பணிகளை பார்வையிட வந்த அந்த அமைப்பின் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில்  ஒரு அரசு என்பது மக்களின் நலனி; அக்கறை காட்ட வேண்டிய அரசாக இருக்கவேண்டும்,ஆனால்  தமிழகத்தை பொருத்தவரை அரசே மதுகடைகளை ஏற்று நடத்திவருகிறது என்றும், அதிலும் சிறுவர்கள் படிக்கின்ற பள்ளிகூடங்கள், வழிபாட்டு தளங்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் மதுபானக்கடைகளை நடத்தக்கூடாது என்று இருக்கிரநேரத்திலும் இதுபோன்ற இடங்களில் மதுபானக்கடைகளை நடத்தி பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் எனவே தமிழக அரசு மக்களின் நலனில்  அக்கறை காட்டுகிற விதமாகவும், ஒட்டுமொத்த மக்களின் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என வலியுருத்தியிள்ளார்.


0 comments: