Wednesday, January 13, 2016

On Wednesday, January 13, 2016 by Unknown in , ,    

தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் 27வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பைக் பேரணி இன்று நடைபெற்றது.

இருவக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து போலீசார் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு தொடங்கியது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிக்கு ஏஎஸ்பி அருண் சக்திகுமார் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநகர போக்குவரத்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முத்துபாண்டி, வேலாயுதம், நம்பிராஜன், வாகன ஆய்வாளர்கள் விநாயகம், சிவகுமார், பெலிக்ஸ் மாசிலாமணி, ஊர்க்காவல்படை தளபதி பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இப்பேரணி மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில நிறைவடைந்தது.

0 comments: