Friday, May 13, 2016
திருப்பூரில் தேர்தலுக்குப் பிறகு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடிகளை அகற்றினர்.
திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மெய்யாண்டம்பாளையம், ஏ.டி.காலனியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மே 10-ஆம் தேதி முதல் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை திமுக வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தால் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை அப்பகுதி மக்கள் அகற்றினர். உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment