Tuesday, May 17, 2016
காங்கயம் அருகே வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது, முதன்மை வாக்குச் சாவடி அலுவலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலை அருகே, கரட்டுமடம் ஜி.கே.என். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (54). அவர், காங்கயம் தொகுதி, வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியின் முதன்மை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, காலை 11.30 மணி அளவில் ஆசிரியர் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவிச் சிகிச்சைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார். அதையடுத்து அவரது சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இத்தகவல் அறிந்ததும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் என்.ராஜன், துணைத் தேர்தல் அலுவலர் கே.ராஜகோபால் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாக்குப் பதிவின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, முதன்மை வாக்குச் சாவடி அலுவலர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment