Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23-07-2016 சபரிநாதன் 9443086297
தமிழக பட்ஜெட் அதிருப்தியாக உள்ளதாக போக்குவரத்து துறை பணியாளர் சம்மேளனம் அறிவித்து உள்ளது
அகில இந்திய போக்குவரத்து சம்மேளனத்தின் தேசிய தலைவர் கு.பாலசுப்பிரமணியம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்….. தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் ஒருகிணைப்பு மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் போக்குவரத்தில் தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டில் போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பான 7வது சம்பள கமிஷனை ரத்து செய்து 6வது சம்பள கமிஷன் அடிப்படையிலேயே ஊதியம் வழங்குதல் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயும் ஓய்வ10தியமாக 9 ஆயிரம் ரூபாயும்ää புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் பட்ஜெட் அரசு பணியாளர்களுக்கு திருப்தி தரவில்லை. அதிருப்தியாக உள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரிலேயே அரசு பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தொடர்ந்து கூறும்போது….. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நீக்கப்பட்டதை அறிந்த செல்வராஜ் சங்க பணம் 5 லட்சம் ரூபாயை அவர் முறைகேடாக கையாடல் செய்துள்ளார். அவர் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்று கூறினார். பேட்டியின் போது சிறப்பு தலைவர் சிவக்குமார் பொது செயலாளர் குப்புசாமி முன்னாள் தலைவர் பால்பாண்டியன்ää தமிழ்நாடு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி
தேசிய தலைவர் கு.பாலசுப்பிரமணியம்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...