Monday, August 29, 2016
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (29-9-2016) காலை 11 மணியளவில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தாலுக்கா வி.தொ.ச.தலைவர் ஆர்.மணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வி.தொ.ச.தலைவர் எஸ்.லோகநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாய சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் வி.தொ.ச. தாலுக்கா செயலாளர் க.பிரகாஷ், துணைத்தலைவர் ராமசாமி, சிஐடியு நிர்வாகிகள் பன்னீர்செலவம், வி.கே.பழனிசாமி உட்பட 40 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். (இணைப்பு: போட்டோ)
கோரிக்கைகள்;
-மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்க வேண்டும். சம்பளம் வழங்க காலதாமதம் செய்ய கூடாது. 100 நாள் வேலையை 85 நாளாக குறைக்காதே! 150 நாளாக உயர்த்திடுக!
-ஊத்துக்குளி தாலூக்கவில் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை பரீசிலித்து உத்திரவுகள் வழங்க வேண்டும். உதவி தொகை நிறுத்தியோர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
-ஊத்துக்குளி தாலூக்கவில் புதிய குடும்ப அட்டை கேட்டு 2013 ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
0 comments:
Post a Comment