Tuesday, September 06, 2016
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் மாநகர காவல் துறையால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1. அவினாசியிலிருந்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் பூண்டியிலிருந்து ரிங்ரோடு, பூலுவபட்டி, வழியாக புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
2. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து வெளியூர் (திருச்சி, கோவை, மதுரை) பேருந்துகள் அனைத்தும் பூலுவபட்டி சென்று ரிங்ரோடு வழியாக அந்தந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
3. காங்கேயம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் நல்லூர், வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
4. தாராபுரம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் கோவில்வழி, வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
5. பல்லடத்திலிருத்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் வீரபாண்டி பிரிவிருந்து பழவஞ்சிபாளையம் வழியாக கோவில்வழி, பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
6. மங்கலம் வழியாக திருப்பூர் வரும் பேருந்துகள் அனைத்தும் ஆண்டிபாளையம் பிரிவு, வித்யாலயம் வழியாக பல்லடம் சாலையை வந்தடைய வேண்டும்.
7. அனைத்து வெளியூர் பேருந்துகளும் 08.09.2016 அன்று பழைய பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.
8. அனைத்து உள்ளூர் பேருந்துகளும் ஊர்வலபாதைக்கு ஏற்றாற்போல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வழித்தடம் மாறுதல் செய்யப்படும்.
என திருப்பூர் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment