Wednesday, September 28, 2016
திருப்பூர்,புதுப்பட திருட்டு வி.சி.டி.க்களை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த படங்களை திருட்டு வி.சி.டி.க்களாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று பதிவிறக்கம் செய்வது மற்றும் திருட்டு வி.சி.டி. பிரச்சினைகளால் இந்த தொழில் நசிந்து வருகிறது. திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் ஆன்–லைன் மூலம் புதியபடங்களை பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்கள் உதவியை பயன்படுத்தி தடுப்பதோடு, திருட்டு வி.சி.டி.க்களாக விற்பனை செய்வதையும் தடுத்து அந்த செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment