Thursday, September 01, 2016
சேவூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்து, காவலரைத் தாக்கிக் கடித்துவிட்டு, தப்பியோட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (43). இவர் சணல் பை வியாபாரி. இவர், சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் புதன்கிழமை சணல் பை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற மர்ம நபர், முத்துசாமியிடம் முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, முத்துசாமி சப்தம் போட்டுள்ளார். அவரது சப்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்தியமூர்த்தி, அந்த வழிப்பறித் திருடனை பிடிக்க முயன்றுள்ளார். அந்த திருடன், சத்தியமூர்த்தியைத் தாக்கிக் கடித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார், அந்தத் திருடனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர், சேவூர் அருகே புதுச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (எ) புங்கான் என்பதும், இவர் ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் புங்கானை கைது செய்துள்ளனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment