Thursday, September 01, 2016
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல்
பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம், மயிலாபுரம், மொரத்தூர், கொழுமம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் சில தனிப்பட்ட நபர்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதாகக் கூறி புதன்கிழமை உழவர் உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் திருப்பூர் மாவட்ட எல்லையான கொழுமம் சோதனைச் சாவடி அருகே மறியலில் ஈடுபட வந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினரும் அங்கு வந்திருந்தனர். ஆனால், விவசாயிகள் திடீரென அப்பகுதியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மாவட்ட எல்லையிலேயே போலீஸார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சாலை மறியல் குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு பழனி வட்டாட்சியர் ராஜேந்திரன், பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment