Wednesday, December 21, 2016
திருப்பூர்
திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவருடன் சுற்றிய மாணவிகளை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவிகள்திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவருடன் இரு இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்கள். மேலும் அந்த இளம்பெண்கள் தன்னுடைய சகோதரிகள் என்றும், தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உடன் வந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்களுடன் வந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளம்பெண்கள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்றும், அவர்கள் இந்த வாலிபருடன் இரவு நேரத்தில் வாலிபாளையம் பகுதியில் சுற்றியதும் தெரியவந்தது.
பெற்றோருடன் அனுப்பிய போலீசார்இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி கூட்டி சென்றனர். மாணவிகள் கூறிய முகவரிக்கு போலீசார் அவர்களை கூட்டி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னரே மாணவிகள் கூறியது தவறான முகவரி என்று தெரியவந்தது. பின்னர் மாணவிகளிடம் இருந்து பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
பின்னர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோருடன் போலீசார் மாணவிகளை அனுப்பி வைத்தனர். வாலிபரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே பல மாணவிகள் பல்வேறு தவறான பாதைகளில் செல்வதால் பெற்றோர் கவனத்துடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்
திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவருடன் சுற்றிய மாணவிகளை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவிகள்திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவருடன் இரு இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்கள். மேலும் அந்த இளம்பெண்கள் தன்னுடைய சகோதரிகள் என்றும், தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உடன் வந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்களுடன் வந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளம்பெண்கள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்றும், அவர்கள் இந்த வாலிபருடன் இரவு நேரத்தில் வாலிபாளையம் பகுதியில் சுற்றியதும் தெரியவந்தது.
பெற்றோருடன் அனுப்பிய போலீசார்இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி கூட்டி சென்றனர். மாணவிகள் கூறிய முகவரிக்கு போலீசார் அவர்களை கூட்டி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னரே மாணவிகள் கூறியது தவறான முகவரி என்று தெரியவந்தது. பின்னர் மாணவிகளிடம் இருந்து பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
பின்னர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோருடன் போலீசார் மாணவிகளை அனுப்பி வைத்தனர். வாலிபரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே பல மாணவிகள் பல்வேறு தவறான பாதைகளில் செல்வதால் பெற்றோர் கவனத்துடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment