Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
நிலவிவரும் கொரானா தொற்று காரணமாக மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் செயலில் வர உள்ள நிலையில் கை சுத்திகரிப்பான் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 100 மிலி கை சுத்திகரிப்பான் சராசரியாக 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானியர்கள் வாங்கி பயன் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறையின் தொழில் முனையமான ஹீபர் ஹைஜீன் என்டர்பிரைசஸ் (HHy) இன்று கல்லூரியின் 14 தத்து கிராமங்களில் ஒன்றான மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள குமாரவயலூரில் மக்களுக்கு இலவசமாக கை சுத்திகரிப்பான் விநியோகித்து. வேதியல் துறைத் தலைவர் முனைவர். பிரின்சி மெர்லின் அவர்கள் கை சுத்திகரிப்பான்பயன்படுத்தும் முறையை செய்து காட்டினார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரதிகள் வழங்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி தயாரிக்கப்பட்ட இந்த தயாரிப்பு 2 வகைகளில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது. எத்தில் ஆல்கஹால் அடிப்படை கொண்ட வகை ஒன்று, மற்றொன்று ஐசோ ப்ரோப்பைல் ஆல்கஹால் கொண்டது. இரண்டு தயாரிப்புகளிலும் கைகளை பாதுகாக்கவும், ஈரப்பதம் கைகளிலிருந்து குறையாமல் வைக்கவும் கிளிசரின் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பானாக ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கப்பட்டுள்ளளது. எந்தவித தேவையற்ற மணம் மற்றும் நிறக்கூட்டுவான் கலப்படமில்லாமல் WHO வின் பரிந்துரைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சுத்திகரிப்பான் குறிப்பாக குமாரவயலூர் இல் வசிக்கும் சுமார் 120 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயாபரன் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment