Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கரொனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. பிரதமரும், முதல்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 75 வயதாகும் என்னை திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் தான் பொறுப்பு. புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் சார்பில் சென்ற என்னை இவ்வாறு அலைக்கிறார்கள். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வருவதாக பொய் செய்திகளை பரப்புகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கடந்த பத்து நாட்கள் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின் போது என்னை மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். இதனால் எனக்கு கரொனா தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment