Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறை அருகே
எந்தவித உதவியுமின்றி பரிதவிக்கும் நாடக கலைஞர்கள்.
வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி அரசுக்கு கோரிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறும். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைளின் தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்த பகுதிகளிலும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இதுவரை எந்தவித உதவியும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடந்த ஒன்றரை மாதமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பட்டிச்சாவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசு கோவில்பட்டி சங்கத்தில் உள்ள நாடக கலைஞர்களுக்கு உதவிட வேண்டும் என்று நாடக – நடிகர்கள் வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப் பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment