Monday, August 16, 2021
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்
ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து
பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2021) சுதந்திர தின விழா இவ்விழாவில் ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரானா (covid - 19) நோய் தடுப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்த 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ஆதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து நிறைவு செய்த 12 பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தைஅருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் திருமதி. எஸ் . அமுதவள்ளி, , நகர் நல அலுவலர் திருமதி. மரு. எம்.யாழினி , செயற்பொறியாளர்கள் திரு.பி.சிவபாதம், திரு.ஜி.குமரேசன், உதவிஆணையர்கள் திரு.ச.நா.சண்முகம், திரு.எம்.தயாநிதி, திரு.எஸ்.திருஞானம், திரு.சு.ப.கமலக்கண்ணன், திரு.எஸ், செல்வபாலாஜி மற்றும் உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...


0 comments:
Post a Comment